இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. 

by Admin / 31-01-2022 11:41:39pm
இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. 

19 வயதிற்கு உட்பட்டோருக்கானர் உலக கோப்பை தொட நடைபெற்று வருகிறது.  ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் ஏற்கனவே அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன நான்காவது அணியாக அரையிறுதிக்கு முன்னேறும் முனைப்பில் இந்தியா - வங்கதேசம் அணிகள் நேற்று மோதின. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன்  யாஷ் துல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. 37 புள்ளி 1 ஓவரில், 111 ரன்னுக்கு ஆல் அவுட். 

112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய  அணி களமிறங்கியது.தொடக்க ஆட்டக்காரர் ஹர்னூர் சிங் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரகுவன்ஷி பொறுப்புடன் ஆடி 44 ரன்னில் அவுட்டானார். ஷேக் ரஷீத் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில், கேப்டன் யாஷ் தல் பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்குசென்றது 

 

Tags :

Share via