மயிலாடுதுறை ரங்கநாதர் கோவிலில் வெள்ளி பட்டயங்களை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மயிலாடுதுறை பரிமள ரெங்கநாதர் கோயிலில் 7 ஆண்டுக்கு முன் வெள்ளி படிச்சட்டத்தை திருடிய பட்டர், தீட்சிதர் கைது செய்யப்பட்டனர். உற்சவ மூர்த்தியை தூக்கிச் செல்ல பயன்படும் படிச்சட்டத்தை கோயில் பட்டர், தீட்சிதர் திருடியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக புகாரின் பேரில் ஸ்ரீநிவாச ரெங்கநாத பட்டர், முரளிதர தீட்சிதர் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்ததுடன், விற்பனை செய்யப்பட்ட படிச்சட்டமும் மீட்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார் அவர்கள் 2 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
Tags :