ஏடிஎம் இயந்திரங்களினால் பொதுமக்கள் அவதி:
தேனி மாவட்டம், சின்னமனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட காமாட்சிபுரம் ஊராட்சியில் மெயின் ரோட்டில் இண்டிகேஷ் ஏடிஎம் இயந்திரம், சீப்பாலக்கோட்டை செல்லும் சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளையின் ஏடிஎம் இயந்திரம் என காமாட்சிபுரம் ஊராட்சியில் வேப்பம்பட்டி, பூமலைக்குண்டு, ஜங்கால்பட்டி,
எரக்கோட்டைபட்டி, எஸ்.அழகாபுரி, காமாட்சிபுரம், கள்ளபட்டி உள்ளிட்ட கிராமங்களையும், கிராமத்து மக்களையும் உள்ளடக்கி இவ்விரண்டு ஏடிஎம் இயந்திரங்கள் உள்ளன.
இயந்திரத்தை நம்பி வாழும் இக்கணினியுக காலகட்டத்தில் அடிக்கடி செயல்படாத, இவ்விரண்டு ஏடிஎம் இயந்திரத்திரங்களினால் பள்ளி,கல்லூரி செல்லும் மாணாக்கர்கள்,அரசு மற்றும் தனியார் துறை அலுவலர்கள், இளைஞர்கள், முதியோர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
Tags : atm machanine