20 வயது பெண்ணை 5நாட்களாக கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்த கும்பல்...
பீகார் மாநிலவைஷாலியில் டிசம்பர் 20 ஆம் தேதி மாலை 20 வயது இளம் பெண் வீட்டில் இருந்து மலம் கழிக்க வெளியில் சென்றுள்ளார். அந்த வழியாக வந்த கும்பல் பெண்ணை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இளம் பெண்ணை ஐந்து நாட்களாக கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 2:00 மணியளவில் ஆடு மேய்க்கச் சென்ற பெண், தண்ணீரில் சடலம் கிடப்பதைப் பார்த்துள்ளார். உடனே, அங்கு கூடியிருந்த மக்கள், பெண்ணின் உடலை அடையாளம் காட்டுவதற்காக பெண்ணின் தாயை அழைத்தனர். கொலை செய்யப்பட்டிருப்பது தனது மகள் தான் என உறுதி ஆனது. தகவலறிந்து வந்த காவல் துறையினர் விசாரணையை தொடங்கி சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஹாஜிபூர் சதர் மருத்துவமனைக்கு அனுப்பி, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :