கர்நாடகவை மிரட்டும் டெங்கு.! பாதிப்பு எண்ணிக்கை உயர்வு.

by Staff / 10-07-2024 12:00:29pm
கர்நாடகவை மிரட்டும் டெங்கு.! பாதிப்பு எண்ணிக்கை உயர்வு.

கர்நாடகாவில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வருகிறது. நடப்பு ஆண்டில் 7,362 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அவற்றை அழிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். மேலும் டெங்கு பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஒவ்வொரு மருத்துவமனையிலும் தனியாக வார்டுக்கு பத்து படுக்கை வசதிகளை அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் ஏழு பேர் டெங்குவால் உயிரிழந்துள்ளனர்.

 

Tags :

Share via