அமலாக்கத்துறை அதிகாரிகள் நான்கு பேர் மீது வழக்கு.
திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் ஐ.பெரியசாமியின் மகன் ஐ.பி.செந்தில்குமாரின் அறையைச் சோதனையிடுவதற்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்கள் விடுதிக்குள் நுழைய எந்தவித அனுமதியையும் பெறவில்லை.இதனால், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகச் செயலாளர் சீனிவாசன், மர்ம நபர்கள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி காவல்துறையிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags : அமலாக்கத்துறை அதிகாரிகள் நான்கு பேர் மீது வழக்கு.



















