வெடித்து சிதறிய கார்
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் இன்று அதிகாலை 4.15 மணி அளவில் மாருதி காரில் இருந்த சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்தார். சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்தது சிதறி இருப்பது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களும், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும், மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு விசாரணையானது நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கோவை நகரில் பாதுகாப்புக்காக சேலம், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். வழிபாட்டு தலங்களில் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Tags :