திருப்பதியில் சூரிய ஜெயந்தியைமுன்னிட்டு ரத சப்தமி விழா 8-ந்தேதி நடக்கிறது.

by Editor / 07-02-2022 07:35:59pm
திருப்பதியில்  சூரிய ஜெயந்தியைமுன்னிட்டு ரத சப்தமி விழா 8-ந்தேதி நடக்கிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சூரிய ஜெயந்தியையொட்டி ரத சப்தமி விழா நாளை (8-ந்தேதி) நடக்கிறது. 

நாளை  8-ந்தேதி காலையில் இருந்து இரவு வரை 7 வாகனச் சேவை நடக்கிறது. முதல் வாகனச் சேவையாக காலை 6 மணியில் இருந்து காலை 8 மணி வரை சூரிய பிரபை வாகனச் சேவை நடக்கிறது.

 காலை 9 மணியில் இருந்து காலை 10 மணி வரை சிறிய சேஷ வாகனச் சேவை, காலை 11 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை கருட வாகனச் சேவை, மதியம் 1 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை அனுமந்த வாகனச் சேவை, மதியம் 2 மணியில் மாலை 3 மணி வரை கோவிலில் உள்ள ரங்கநாயக்கர் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்படும். தொட்டியில் சக்கர ஸ்தானம் நடக்கிறது.

 மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணிவரை கல்ப விருட்ச வாகனச் சேவை, மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை சர்வ பூபால வாகனச் சேவை, இரவு 8 மணியில் இருந்து இரவு 9 மணி வரை சந்திர பிரபை வாகனச் சேவை நடக்கிறது.

ரத சப்தமி விழாவையொட்டி அன்று கோவிலில் நடக்கும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீப அலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்படுவதாக, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

மேற்கண்ட 7 வாகனங்களில் உற்சவர் மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடனும், மலையப்பசாமி தனித்தும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். 

அனைத்து வாகனச் சேவைகளும் கோவில் உள்ளேயே பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடக்கிறது. கோவிலுக்கு வெளியே நான்கு மாடவீதிகளில் உலா வராது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
 

திருப்பதியில்  சூரிய ஜெயந்தியைமுன்னிட்டு ரத சப்தமி விழா 8-ந்தேதி நடக்கிறது.
 

Tags :

Share via