போலி ஆவணங்களை கொடுத்து வங்கியில் 10 கோடி ரூபாய் மோசடி

by Editor / 11-02-2022 11:40:12am
போலி ஆவணங்களை கொடுத்து வங்கியில் 10 கோடி ரூபாய் மோசடி

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி மண்டல அலுவலகத்தில் முதுநிலை மேலாளராக பணியாற்றி வருபவர் ஜெகன் குமார். இவர், கோவை மாவட்ட குற்றப்பிரிவில் கொடுத்த புகாரின் அடிப்படையில்தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் சோமனுார் கிளையில், முன்பு மேலாளராக பணியாற்றிய ராஜேஷ், 17 பேருக்கு 10 கோடியே 73 லட்சம் ரூபாய் கடன் வழங்கியுள்ளார். இந்த கடன்களுக்கு ஈடாக வழங்கப்பட்ட சொத்து ஆவணங்கள் போலியானவை என்று விசாரணையில் தெரியவந்தது.ஒரு சில சொத்துக்களின் மதிப்பை மிக அதிகமாக காட்டியும், இல்லாத நிறுவனங்களை இருப்பதாக காட்டியும் கடன் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த மோசடியில் ஈடுபட்ட 8 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த மோசடியில் 35 நபர்களுக்கு தொடர்பு உள்ளதாக  காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

போலி ஆவணங்களை கொடுத்து வங்கியில் 10 கோடி ரூபாய் மோசடி
 

Tags : வங்கியில் 10 கோடி ரூபாய் மோசடி

Share via