ராமநவமி கொண்டாட்டத்தில் கிணற்றின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 35 பேர் உயிரிழப்பு

by Editor / 31-03-2023 08:18:33am
ராமநவமி கொண்டாட்டத்தில் கிணற்றின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 35 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தின் இந்தூரில் கோவில் கிணற்றில் விழுந்த பக்தர்களில் 35 பேர் உயிரிழந்துள்ளனர்என தகவல் வெளியாகியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் படேல் நகரில் அமைந்துள்ள கோவிலில் ராமநவமி கொண்டாட்டத்தில் படிக்கிணற்றின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. கிணறு இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், தகவல் அறிந்து, மாவட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீஸார் மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் ஏணிகள் மற்றும் கயிறுகள் மூலம் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via