சாலையில் எழுதி வைத்த பொதுமக்கள்

by Admin / 11-02-2022 11:57:36am
சாலையில் எழுதி வைத்த பொதுமக்கள்

தமிழகம் முழுவதும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்துக் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்கள் வார்டுகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் திண்டுக்கல் மாநகராட்சி நாற்பத்தி எட்டாவது வார்டு தபால்தந்தி 2-வது தெருவில் ஓட்டுக்கு பணம் வேண்டாம் ரோட்டுக்கு தரம், ஒடைக்கு சுகாதாரம் வேண்டும் என்ற வாசகம் எழுதி இருந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில் ஒவ்வொரு முறையும் தேர்தலுக்கு வாக்குறுதி வருகின்றனர். ஆனால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வருகின்றனர்.

ஆகையால் எங்கள் பகுதியில் தரமான சாலைகள் அமைக்க வேண்டும். தூர்வாரப்படாத கழிவுநீர் வாய்க்கால்களை தூர்வாரி சுகாதாரமாக மாற்ற வேண்டும். ஓட்டுக்கு பணம் வேண்டாம் என தெரிவித்தார்.

 

Tags :

Share via