குவாட் கூட்டத்தில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்பு

by Admin / 11-02-2022 12:31:44pm
குவாட் கூட்டத்தில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்பு

உக்ரைன் மற்றும் பல்வேறு வி‌ஷயங்களில் ரஷியா மற்றும் நேட்டோ நாடுகளுக்கு இடையே பதட்டம் அதிகரித்து வரும் நிலையில் குவாட் நாடுகளின் கூட்டம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இன்று நடக்கிறது. 

இந்த குவாட் நாடுகள் கூட்டத்தில் வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்க உள்ளனர்.

இந்த கூட்டத்தில் இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்கிறார். மேலும் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன், ஜப்பானிய வெளியுறவுத்துறை மந்திரி ஹயாஷி யோஷிமாசா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். 

இந்த கூட்டம் இந்தியா பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை கணிசமாக அதிகரிப்பதில் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

 

Tags :

Share via