அதிமுக பிரமுகர் மகன் வெட்டி கொலை

by Editor / 17-10-2021 08:51:32pm
 அதிமுக பிரமுகர் மகன் வெட்டி கொலை

தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே அதிமுக பிரமுகர் மகன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே பலபத்திரராமபுரம் குளக்கரை அருகே மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்து கிடப்பதாக ஊத்துமலை காவல் நிலையத்திற்கு அப்பகுதியினர் தகவல் தெரிவித்துள்ளனர்.இதனையறிந்த தென்காசி துணை காவல் கண்கணிப்பாளர் (பொறுப்பு) மணி மாறன் தலைமையில் ஊத்துமலை காவல் ஆய்வாளர் சுரேஷ் மற்றும் உதவி ஆய்வாளர் காஜா மைதின், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் பத்திரராமபுரம் குளக்கரையில் கொலை செய்யப்பட்டவர் சங்கரன்கோவில் அருகே சின்னக்கோவிலாங்குளம் பகுதியை சேர்ந்த அதிமுக எம்ஜிஆர் மன்ற செயலாளர் செல்லத்துரை என்பவரது மகன் இளங்கோ வயது - 41 என்பது தெரியவந்தது. சென்னையில் ஆட்டோ ஒட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளர் என்பதும் தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்கு செலுத்த வந்தவர் என தெரிய வந்துள்ளது.

ஊத்துமலை

இளங்கோவிற்கு திருமணமாகி மனைவி சங்கரன்கோவிலில் அரசு கலை கல்லூரியில் சமையலர் வேலை செய்து வருகிறார். எனவும் ஒரு பெண் குழந்தை உள்ளது எனவும் தெரியவந்துள்ளது, இதுதொடர்பாக ஊத்துமலை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கிறார்கள்.

 

Tags :

Share via