கோடை விடுமுறைக்கோரி தொடரும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் போராட்டம்.

by Editor / 26-04-2023 12:01:25am
கோடை விடுமுறைக்கோரி தொடரும் அங்கன்வாடி  ஊழியர் மற்றும் உதவியாளர் போராட்டம்.

தமிழகத்தில் மே மாதம் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கும் கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.மாபெரும் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது. மாலை 5 மணி முதல் தொடங்கிய இந்த காத்திருப்பு போராட்டம் தற்பொழுது வரை நீடித்து வருகின்றது. மேலும் கொசுக்கடிகளுக்கு இடையே அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்  அந்த பகுதியிலேயே தங்கி உள்ளனர். மேலும் இதன் தொடர்ச்சியாக  மாவட்ட போலீசாரும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எந்த விதமான பேச்சுவார்த்தையும் இதுவரை அரசு அதிகாரிகள் தரப்பில் நடைபெறவில்லை என்பதால் தொடர்ந்து அவர்கள் போராட்டம் நீடித்து வருகின்றது.

 

Tags :

Share via