6100 ரூபாய்க்காக கால் டாக்சி ஓட்டுநர் விஷ ஊசிபோட்டு கொலை கணவன்,மனைவி கைது

by Editor / 12-02-2022 12:51:37pm
6100 ரூபாய்க்காக கால் டாக்சி ஓட்டுநர் விஷ ஊசிபோட்டு கொலை கணவன்,மனைவி கைது

கோவை வடவள்ளி ஓணாப்பாளையம் பகுதியில் தனியார் டாக்சி ஓட்டுனராக இருந்துவருபவர் சனு இவர் கடந்த 9ஆம் தேதி அன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.மேலும் அவரது உடலில் பல்வேறு காயங்கள் இருந்துள்ளது.இதனைத் தொடர்ந்து அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது  உறவினர்கள் மற்றும் சக டாக்சி ஓட்டுநர்கள் உடலைவாங்க மறுத்து அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவித்ததைத் தொடர்ந்து அவரது உடல் நேற்று பெற்றுக்கொள்ளப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் சனு அலைபேசியில் பதிவான எண்களை வைத்து விசாரணை மேற்கொள்ளபட்டதில் 8ம்தேதி தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த ஸ்டீபன் என்பவர் கடைசியாக பேசியதும்,அந்த டாக்ஸியில் பயணித்ததும்  தெரிய வர அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

ஸ்டீபனிடம்  நடத்தப்பட்ட விசாரணையில் பணத்திற்காக அவரும் அவரது மனைவி அமலோற்பவம் சேர்ந்து ஓட்டுநரை கட்டையால் அடித்தும் விஷ ஊசி செலுத்தியும் கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர். 

இவர்களிடமிருந்து கொலை செய்ய பயன்படுத்திய மரத்தடி, 6100 ரூபாய் பணம், லேப்டாப், 20 க்கும் மேற்பட்ட  செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.மேலும் இவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டதில் இருவர் மீதும் ஏற்கனவே இது போன்ற விஷ ஊசி செலுத்தி கொலை செய்த இரண்டு கொலை வழக்குகள், ஆயுத வழக்கு ஆகியவை சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.வெறும் 6100 ரூபாய்க்காகவா இந்த கொலை நடந்தது வேறு காரணங்கள்   ஏதும் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடந்துவருகிறது.

 

Tags : Husband and wife arrested for poisoning taxi driver

Share via