8 வயது சிறுவன் மாரடைப்பால் மரணம்

by Staff / 11-03-2024 11:27:49am
8 வயது சிறுவன் மாரடைப்பால் மரணம்

உத்தரப் பிரதேசத்தில் 2ம் வகுப்பு படிக்கும் சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஃபிரோசாபாத் நகரில் உள்ள ஹன்ஸ்வாஹினி பள்ளியில், சனிக்கிழமை மதிய உணவு நேரத்தில் அனைத்து மாணவர்களும் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சந்திரகாந்த் (8) என்ற சிறுவன் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தான். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

 

Tags :

Share via