கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு 5 மணிநேரம் மின்வெட்டு

by Admin / 23-02-2022 05:22:28pm
கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு 5 மணிநேரம் மின்வெட்டு

கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் எரிபொருள் வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் வாகன எரிபொருள் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது.

இலங்கையின் பல இடங்களில் பெட்ரோல் நிரப்பும் மையங்கள் மூடப்பட்டுள்ளதால் குறைந்த அளவிலான எரிபொருள் மிச்சம் இருப்பதாலும் எரிபொருள் நிரப்ப வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மின் உற்பத்திக்கு தேவைப்படும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஒரு நாளைக்கு 2 முதல் 5 மணி நேரம் வரை மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர் காலத்தில் நிதி நெருக்கடிக்கு ஆளான இலங்கைக்கு 7 பில்லியன் அமெரிக்க டாலருக்கு அதிகமான வெளிநாட்டு கடன் இருப்பதாக கூறப்படுகிறது

 

Tags :

Share via