விமானம் தீப்பிடித்து எரிந்ததில் 113 பயணிகள் உயிர் தப்பினர்
சீனாவின் சங்கீங்கில் உள்ள விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட திபெத்தி ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது. தீபேத்தின் நியங்கிசசி நோக்கி விமானம் புறப்பட்ட சமயத்தில் பைலட்டுகள் அசாதாரண சூழல் நிலவுவதை உணர்ந்து உடனடியாக அதை தரையிறக்க முயன்று உள்ளனர் .அப்போது அந்த விமான ஓடுபாதையை விட்டு சற்று விலகி சென்று தீப்பிடித்து எரிந்தது. அவசர அவசரமாக விமானத்திலிருந்த 122 பேரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். லேசாக காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் தகவலறிந்து சென்ற மீட்பு படையினர் விமானத்தில் பற்றி எரிந்த தீயை தண்ணீர் பீச்சி அடித்தனர்.
Tags :