சூலூர் விமானப்படை தளத்தில் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

by Editor / 09-12-2021 12:25:18pm
சூலூர் விமானப்படை தளத்தில் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் இறந்தனர். இவர்களது உடல் இன்று பிற்பகலில் கோவை சூலூரில் உள்ள விமானப்படை தளத்துக்கு கொண்டுவந்து பின்னர் உடல்கள் தனி விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டு செல்லப்படுகிறது.இந்த பணிகளை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் பார்வையிட்டார்.சூலூர் விமானப்படை தள அதிகாரிகளிடம் தனி விமானத்தில் உடல்கள் அனுப்பி வைப்பது குறித்தும் கேட்டறிந்தார்.

 

Tags :

Share via