பெண்கள் சிறையில் ஆயுள் தண்டனை கைதி மூச்சுத்திணறலால் மரணம்

by Admin / 24-02-2022 03:31:00pm
பெண்கள் சிறையில் ஆயுள் தண்டனை கைதி மூச்சுத்திணறலால் மரணம்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் குடியைச் சேர்ந்தவர் 65 வயதுடைய இஞ்சுதுணிசா. கொலை வழக்குகளில் கைதாகி இரட்டை ஆயுள் தண்டனை பெற்று தொரப்பாடியில் உள்ள வேலூர் பெண்கள் தனிச்சிறையில் கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் 18 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் சிறையில் மூச்சுத்திணறல் மற்றும் வலிப்பு காரணமாக அவதிக்குள்ளாகி வந்துள்ளார். இதனால் சிறைத்துறை மூலம் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி கைதி இஞ்சுவதுணிசா உயிரிழந்துள்ளார். இது குறித்து சிறைத்துறை அளித்த புகாரின் அடிப்படையில் பாகாயம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via