சீக்கிரம் இந்தியா அழைத்துச்செல்லுங்கள் மாணவரின் வீடியோ வைரல்

by Admin / 26-02-2022 10:43:54am
சீக்கிரம் இந்தியா அழைத்துச்செல்லுங்கள் மாணவரின் வீடியோ வைரல்

உக்ரைனில் உணவு பற்றாக்குறை உள்ளதாகவும், விரைவில் தங்களை இந்தியா அழைத்து செல்ல கோரியும் புதுச்சேரியை சேர்ந்த மாணவர் ஒருவர் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உக்ரைன் நாட்டில் கல்வி பயின்று வருகிறார்கள். 

உக்ரைனில் தற்போது போர் நடந்து வருவதால் அங்கு சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் முத்தியால்பேட்டையை சேர்ந்த நித்திஷ்குமார் என்ற மருத்துவ மாணவர், தன்னை மீட்க கோரி உக்ரைன் நாட்டில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
 
அதில் போர் காரணமாக உணவு பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதாகவும், இரவு நேரத்தில் மின் விளக்குகளை அணைத்துவிட்டு இருளில் உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார். 

கடும் கட்டுபாடுகள் விதிக்கபட்டுள்ளதால் விரைவாக தங்களை இந்தியாவிற்கு அழைத்து செல்ல வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Tags :

Share via