ஆருத்ரா வழக்கில் ஆர்.கே.சுரேஷிடம் 2வது நாளாக விசாரணை?

by Staff / 13-12-2023 12:37:12pm
ஆருத்ரா வழக்கில் ஆர்.கே.சுரேஷிடம் 2வது நாளாக விசாரணை?

ஆருத்ரா கோல்ட் நிதி நிறுவன மோசடி வழக்கில், துபாயில் நீண்ட காலமாக தலைமைறைவாக இருந்த நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் இன்று 2வது நாளாக விசாரணைக்கு ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆருத்ரா நிறுவனம் ரூ.2438 கோடி மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்றைய விசாரணையில், 'ஒயிட் ரோஸ்' என்ற படத்துக்காக ஆருத்ரா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தயாரிப்பாளர் ரூசோவிடம் பணம் பெற்றதாக ஆர்.கே.சுரேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். ரூசோவிடம் வங்கிக்கணக்கு மட்டுமன்றி ரொக்கமாகவும், கோடிக்கணக்கில் பணம் பெற்றுள்ளார். பணத்தை சொந்த செலவிற்கும் பயன்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

 

Tags :

Share via