கொரோனா நிதி வழங்கிய காவலாளிக்கு முதல்வர் பாராட்டு 

by Editor / 14-05-2021 08:55:59pm
கொரோனா நிதி வழங்கிய காவலாளிக்கு முதல்வர் பாராட்டு 

 

மயிலாடுதுறையை சேர்ந்த தங்கதுரை தற்போது சென்னை சாலிகிராமத்தில் தங்கி பணியாற்றி வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுபோக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில் மிதிவண்டியில் வந்து முதலமைச்சரை நேரில் சந்தித்து நிதி வழங்க விரும்பியுள்ளார். அலுவல் காரணமாக அவரை சந்திக்க முடியாதததால் அரசுக் கணக்கில் அந்த பணத்தை சேர்த்துள்ளார்.

இந்த தகவலை அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தங்கதுரையை நேரில் அழைத்து நிதி வழங்கியதற்காக தனது நன்றியை தெரிவித்துள்ளார். மேலும் புத்தகம் ஒன்றையும் அவருக்கு பரிசாக வழங்கியுள்ளார்.

 

Tags :

Share via