பாம்பு கடித்து மாணவன் பலி 2 பேர் உயிருக்கு போராட்டம்

by Admin / 04-03-2022 02:48:17pm
பாம்பு கடித்து மாணவன் பலி 2 பேர் உயிருக்கு போராட்டம்

ஆந்திர மாநிலம் சிராந்தரசம் மாவட்டம் குருப்பம் பகுதியில் அரசு நல மாணவர் விடுதி உள்ளது. இதில் ஏராளமான பள்ளி மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

சம்பவத்தன்று இந்த விடுதிக்குள் வி‌ஷ பாம்பு புகுந்தது. அங்குள்ள 3 மாணவர்களை பாம்பு அடுத்தடுத்து கடித்தது. 

இதில் வி‌ஷம் தலைக்கேறிய 3 மாணவர்கள் மயங்கி விழுந்தனர். உடனடியாக அவர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் ஒரு மாணவர் இறந்தார்.

மற்ற 2 மாணவர்கள் உயிருக்கு போராடி வருகின்றனர். அவர்களுக்கு செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 

 

Tags :

Share via