இந்தியர்களை மீட்கச் சென்ற மேலும் 3 விமானப்படை விமானங்கள் நாடு திரும்பினார்

by Admin / 04-03-2022 04:48:51pm
இந்தியர்களை  மீட்கச் சென்ற மேலும் 3 விமானப்படை விமானங்கள் நாடு திரும்பினார்

ஆப்ரேஷன் கங்கை திட்டத்தின் கீழ்உக்ரைனில்  சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக சென்ற மேலும் மூன்று விமானப்படை விமானங்கள் நாடு திரும்பினார்.

இது தொடர்பாக இந்திய விமானப்படை வெளியிட்ட  டுவிட்டர் பதிவில் மேலும் மூன்று சி 17 ரக விமானங்கள் உக்ரைனில் சிக்கிய 630 இந்தியர்களுடன்ஹிண்டன்  விமானப்படை தளத்திற்கு வந்த அடைந்ததாக தெரிவித்துள்ளார்.

உக்ரைனின்அண்டை நாடுகளான ருமேனியா மற்றும் ஹங்கேரி வழியாக விமானப்படை விமானங்கள் இந்தியர்களை மீட்டு வந்ததாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது.

உக்ரைனில் இருந்து  இதுவரை 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்  இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டதாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி தெரிவித்துள்ளார்

 

Tags :

Share via