மகளை காதலித்து திருமணம் செய்துகொண்டவரின் தந்தை கழுத்து அறுத்து கொலை: போலீசார் விசாரணை
மதுரை திடீர் நகர் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சிவ பிரசாந்த் இவர் அதே பகுதியை சேர்ந்த சடையாண்டி மகள் சினேகாவை காதலித்து வந்த நிலையில் இரு வீட்டார் எதிர்ப்பை மீறி நேற்று திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பாக திடீர் நகர் காவல் நிலையத்தில் காதலர்கள் சென்று பாதுகாப்பு கேட்டனர். போலீசார் அறிவுரை செய்து அனுப்பிய நிலையில் மணமகன் சிவ பிரசாத்தின் தந்தை ராமச்சந்திரனை சினேகாவின் தந்தை சடையாண்டி நேற்று நள்ளிரவு பெரியார் பேருந்து நிலையம் அருகே வைத்து வாளால் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பியுள்ளார்.அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Tags : The father of a man who fell in love with his daughter and married her has been beheaded: police are investigating