3 நாட்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு  சரி செய்யப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு

by Editor / 15-05-2021 07:16:06pm
3 நாட்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு  சரி செய்யப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு



விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் உள்ள கிராமத்தில் கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணியை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு  தொடங்கி வைத்தார். பின்னர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது,
" தமிழகத்தில் அடுத்த 3 நாட்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு சரி செய்யப்படும். ஸ்டெர்லைட் ஆலையில் 40 டன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அவை 3 நாட்களில் சரி செய்யப்பட்டு தொடங்கப்படும். தமிழகத்தில் சுகாதாரத்துறையுடன் தொழில்துறையும் இணைந்து ஆக்சிஜன் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நெதர்லாந்து நாட்டில் இருந்து 4 டன் வெப்பநிலை கொதிகலன்கள், சீனாவில் இருந்து 12 கண்டெய்னர் மூலமாக ஆக்சிஜன் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது."
இவ்வாறு அவர் கூறினார்.


 

 

Tags :

Share via