ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் மனிதர்களைப்போல அகதிகளான விலங்குகள்

by Admin / 12-03-2022 11:42:06am
ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் மனிதர்களைப்போல அகதிகளான விலங்குகள்


ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் பொதுமக்களை போல் விலங்குகளும் புகலிடம் தேடி அண்டை நாடுகளுக்கு பயணிக்கின்றன.

தலைநகர் கிவ் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட சிங்கம்புலி  காட்டுப் பூனை மற்றும் காட்டு நாய்கள் ஜேர்மனி மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அதேபோல் நகருக்கு அருகில் போரால் சிக்கி  தவித்த சிங்கம் 6 புலிகள் காட்டுப் பூனை மற்றும் காட்டு நாய் உள்ளிட்டவைகள் போலந்தில் உள்ள மிருகக்காட்சி சாலைக்கு மாற்றப்பட்டன.

அதேபோல் தனியாரிடம் இருந்து மீட்கப்பட்ட 6 சிங்கங்கள் மிருகங்கள் பாதுகாப்பு தொண்டு நிறுவனங்கள் மூலம் ஸ்பெயினுக்கு கொண்டு செல்லப்பட்டன

 

Tags :

Share via