தேனி அருகே வழக்கறிஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு - போலீசார் விசாரணை
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள தருமத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவர் கேரளாவில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு போடிக்கு வந்த ரமேஷ்குமார், தனக்கு சொந்தமான தோட்டத்து வீட்டில் தங்கி இருந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை உறவினர்கள் ரமேஷ்குமாருக்கு செல்போனில் அழைத்துள்ளனர். ஆனால் நிண்ட நேரமாகியும் அவர் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் தோட்டத்து வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது, ரமேஷ்குமார் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags :