கர்நாடகாவில் கடலில் மூழ்கி பள்ளி மாணவிகள் 4 பேர் பலி

by Editor / 11-12-2024 10:47:38am
கர்நாடகாவில் கடலில் மூழ்கி பள்ளி மாணவிகள் 4 பேர் பலி

கோலாரில் இருந்து உத்தரகன்னட மாவட்டத்துக்கு பள்ளி சுற்றுலா சென்ற 4 மாணவிகள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். முருடேஸ்வரர் கோயில் கடற்கரைக்கு சென்றபோது மாணவிகள் 7 பேர் ஆழமான கடலில் பகுதிக்கு சென்றுள்ளனர். சக மாணவிகள், ஆசிரியர்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்ட மாணவிகளில் 3 பேரை காப்பாற்றினர்; 4 பேர் கடலில் மூழ்கினர். கடலில் மூழ்கி மாணவிகள் ஸ்ரீவந்ததி, தீஷிதா, லாவண்யா, வந்தனா ஆகியோர் உயிரிழந்தனர்.

 

Tags : கர்நாடகாவில் கடலில் மூழ்கி பள்ளி மாணவிகள் 4 பேர் பலி

Share via