துப்பாக்கி சூடு உயிர்பலி கொந்தளிப்பில் இலங்கை

by Staff / 20-04-2022 02:19:58pm
துப்பாக்கி சூடு உயிர்பலி கொந்தளிப்பில் இலங்கை

இலங்கை அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார் அந்நாட்டின் பல ஊர்களில் கொந்தளிப்பான நிலை ஏற்பட்டுள்ளது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்த அதிபர் கோத்தபய ராஜபக்சே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோர் பதவி விலக வலியுறுத்தி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொழும்பில் அதிபர் மாளிகை முன்பு உள்ள காலி முகத்திடலில் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் மக்கள் தொடர்ந்து ஈடுபட்டு உள்ளனர் இந்த நிலையில் இலங்கையில் நேற்று இரவு முதல் மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது 35 ரூபாய் டீசல் லிட்டருக்கு 75 ரூபாய் உயர்த்தப்பட்டது கண்டித்து அந்நாட்டின் பல ஊர்களில் நேற்று இரவு முதல் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே பொருளாதார நெருக்கடி விலைவாசி உயர்வால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு சிறுத்தை ஏற்படுத்தியது இதை எடுத்த பல ஊர்களில் மக்கள் போராட்டத்தில் இறங்கினர் அந்நாட்டின் கேகாலை மாவட்டத்தில் இரவு தொடங்கி போராட்டத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது சுமார் 15 மணி நேரமாக போக்குவரத்து முடங்கியது அடுத்து போலீசார் குவிக்கப்பட்டனர்.

அவர்கள் போராட்டக்காரர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் இதையடுத்து கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர் ஆனாலும் கலையாத போராட்டக்காரர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர் இதனால் பதட்டமான சூழல் சூழல் ஏற்பட்ட நிலையில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்து காயமடைந்தார் 12 பேர் மருத்துவமனையில்

இதனிடையே பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளன கொழும்பில் ஆர்ப்பாட்டம் பேரணி ஒன்றை முன்னெடுத்துள்ளது பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மதகுருமார்கள் அரசு ஊழியர்கள் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் இணைந்துள்ள பேரணி இது கழிமுக திடலுக்கு சென்றது கொழும்பு நகரில் அவர்கள் செல்லும் வழிநெடுக மக்கள் இணைந்து கொண்டால் பேரணி மிக பிரம்மாண்டமாக காட்சி அளித்தது காலிமுகத்திடலில் ஏற்கனவே திரண்டு உள்ளவர்களுடன் பேரணியாக சென்ற அவர்களும் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்ப்பாட்டத்திற்கு ஏராளமானவர்கள் திரண்டு உள்ளதை அடுத்து அதிபர் மாளிகை முன்பு ராணுவத்தினர் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர் கொழும்பு உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் பதட்டமாக உருவாக்கியுள்ளது.

 

Tags :

Share via