மதுரையில் கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழப்பு

by Staff / 22-04-2022 03:19:21pm
மதுரையில் கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழப்பு

மதுரையில் கழிவுநீர் தொட்டியில் இறங்கி பணியின்போது விஷவாயு தாக்கி 3 ஒப்பந்த ஊழியர்கள் உயிரிழந்தனர் மதுரை மாநகராட்சி 70வது வார்டு நேரு நகரில் உள்ள மாநகராட்சி கழிவு நீர் வெளியேற்றம் தொட்டியில் உள்ள மின்மோட்டார் பழுதாகி கழிவுநீர் தேக்கம் அடைந்துள்ளது இதனை அடுத்து மின்மோட்டாரை வெளியே எடுத்து கழிவு நீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் கார்த்திக் சரவணன் மற்றும் தொழிலாளர்கள் லட்சுமணன் சிவகுமார் ஆகியோர் ஈடுபட்டனர். எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் கழிவுநீர் தொட்டியில் முதலில் இறங்கிய சரவணன் விஷவாயு தாக்கியதில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்துள்ளார். அவரை காப்பாற்றுவதற்காக சிவகுமார் மற்றும் லட்சுமணன் ஆகிய இருவரும் கழிவுநீர் தொட்டி குதித்த போது அவர்களும் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர்.தொழிலாளர்கள் உரிழந்த்தை தொடர்ந்து மற்ற தெழிலாளர்கள் ஆழ்ந்த சோகத்தில்  உள்ளார்கள்.

 

Tags :

Share via