இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுவார் என தகவல்

இலங்கை பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகுவார் என தகவல் வெளியாகியுள்ளது அதிபருடன் சந்திப்புக்கு பின் பேசிய மகிந்த ராஜபக்ச 20 ஆவது சட்ட திருத்தத்தின் படி நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண அதிபருக்கு உரிமை உள்ளதாகவும் அப்படி அதிபர் எடுக்கும் முடிவுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்தார். கடந்த வாரம் பிரதமரை நீக்கி இடைக்கால அரசு அமைக்குமாறு அதிபரை சந்தித்து எதிர்க்கட்சிகள் தெரிவித்த நிலையில் வரும் நாட்களில் இலங்கை அரசியலில் புதிய திருப்பங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
Tags :