நொய்யல் பெருவிழா ஆளுநர் ஆர். என். ரவி பேச்சு

by Staff / 25-08-2023 03:30:51pm
நொய்யல் பெருவிழா ஆளுநர் ஆர். என். ரவி பேச்சு

சாதி, மதம், ஆரியன், திராவிடன் என அந்நியர்கள் பிரிவினையை நம்மிடையே ஏற்படுத்தினார்கள் என்றும், ரிஷிகளின் சனாதன கொள்கை துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும், அதை மீட்க வேண்டும் என ஆளுநர் ஆர். என். ரவி வலியுறுத்தியுள்ளார்.கோவையில் இன்று நடைபெற்ற நொய்யல் பெருவிழாவின் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர். என். ரவி கலந்துகொண்டார்.அப்போது பேசியவர், ஆளுநர் ஆர். என். ரவி பேச்சு. தென்னாடுடைய சிவனே போற்றி, என்னாடவருக்கு இறைவா போற்றி என தமிழில் உரையை துவங்கியவர், சந்நியாசிகள் பங்கேற்றுள்ள நிகழ்வில் பங்கேற்பது ஆசிவதிக்கப்பட்டதாக உணர்வதாகவும், நொய்யல் ஆறு மீட்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம் சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது இந்த நிகழ்வு மிகவும் பாராட்டுக்குரியது என்றார்.

 

Tags :

Share via