டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல் முதியவர் படுகாயம்

by Staff / 25-02-2023 12:56:44pm
டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல் முதியவர் படுகாயம்

கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுக்கா ராமேஸ்வர பட்டி விவசாயி நகர் தொகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் வயது 68. இவர் நேற்று காலை 9 1/4 மணி அளவில் வெண்ணமலை சேரன் பள்ளி தனது tvs xl வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் அப்போது கரூரை சேர்ந்த அசன் எதிர் திசையில் பிளண்டர் பிளஸ் வாகனத்தில் வேகமாக சென்று முதியவர் ஓட்டிய வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தங்கவேலுக்கு வலது கால் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. குழந்தையாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள கங்கா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தது சம்பவம் தொடர்பாக தங்கவேலு மகன் பாலமுருகன் வெங்கமேடு காவல் நிலையத்தில் அளித்த புகார் பேரில் டூவீலரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய அசன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெங்கமேடு காவல்துறையினர்.

 

Tags :

Share via