மேற்கு வங்காள பள்ளியில் குண்டு வெடிப்பு... என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்திரவிட வலியுறுத்தல்

by Editor / 19-09-2022 08:03:11pm
மேற்கு வங்காள பள்ளியில் குண்டு வெடிப்பு... என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்திரவிட வலியுறுத்தல்

மேற்கு வங்காள எதிர்க்கட்சி தலைவரான பா.ஜ.க.வை சேர்ந்த சுவேந்து அதிகாரி, பள்ளியில் நடந்த குண்டுவெடிப்பு பற்றி தேசிய புலனாய்பு முகமை (என்.ஐ.ஏ.) விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், அரசால் உதவி பெறும் பள்ளியில் கடந்த 17-ந்தேதி வகுப்புகள் நடந்து கொண்டிருந்தபோது, காலை 11 மணியளவில் இந்த சம்பவம் நடந்து உள்ளது என அவர் தெரிவித்து உள்ளார்.

 

Tags : West Bengal School Bomb Blast

Share via