ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து என்ஜினீயர் இளைஞர் பலி

by Admin / 24-08-2021 04:50:12pm
ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து என்ஜினீயர் இளைஞர் பலி

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அய்யலூர் அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து என்ஜினீயர் இளைஞர் பலி ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்         

விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை தேவர் நகரைச் சேர்ந்தவர் வீராச்சாமி மகன் கார்த்திக்.25 இவர் மதுரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார் இந்த நிலையில் இன்று காலை திண்டுக்கல் மாவட்டம் பேசும்ஆண்டவர் கோவில் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்துள்ளார் இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் விரைந்து வந்து விசாரணை செய்து வந்ததில் கார்த்திக் சென்னை மார்க்கமாக செல்லும் ரயிலில் இருந்து தவறி விழுந்திருக்கலாம் என்றும் அவர் அடையாள அட்டை மற்றும் முகவரி இருப்பதால் தொடர் விசாரணை செய்து வருவதாகவும் பிரேத பரிசோதனைக்காக  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது  என்று தெரிவித்தனர் ...

 

Tags :

Share via