தமிழகத்தில் ஆன்லைன் கடன் செயலிகளை தடை செய்- ஜான்பாண்டியன் வலியுறுத்தல் 

by Editor / 26-07-2023 03:02:54pm
தமிழகத்தில் ஆன்லைன் கடன் செயலிகளை தடை செய்- ஜான்பாண்டியன் வலியுறுத்தல் 

தமிழகத்தில் ஆன்லைன் கடன் செயலிகளை தடை செய்ய வேண்டும் என தமமுக தலைவர் ஜான்பாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், 'ஆன்லைனில் கடன் வாங்கிய இளைஞர் ராஜேஷ் என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஏராளமான நபர்கள் கடன் செயலியில் இருந்து கடன் பெற்று அதனை திரும்ப செலுத்தியும் பணம் கேட்டு, மிரட்டும் செயல் தமிழகத்தில் வழக்கமாக நடைபெற்று வருகிறது. மத்திய, மாநில அரசுகள் மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த கடன் செயலிகளை தடை செய்ய வேண்டும்' என கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Tags :

Share via