திமுக அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான பாஜகவினர் கைது.

by Editor / 22-06-2024 03:30:50pm
திமுக அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான பாஜகவினர் கைது.

நாட்டையே உலுக்கிய கள்ளக்குறிச்சியில் விசாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்தால் ஆளும்  திமுக அரசை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சித்தனர்.

 தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில்  போராட்டம் நடத்துவதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்து நிலையில் போராட்டக்காரர்களை காவல்துறையினர் கைது செய்ய முற்பட்டபோது இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போராட்டக்காரர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக குண்டு கட்டாக  தூக்கி கைது செய்தனர். 

இதனால் ஆர்ப்பாட்டம் நடத்த வந்த பா.ஜ.க‌ தொண்டர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கைதாக மறுத்த போராட்டக்காரர்களை காவல்த்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்த நிலையில் பலமாவட்டங்களில் பாஜகவினர் சாலைமறியலிலும் ஈடுபட்டனர்.இதன் காரணமாக போராட்டமங்கள் நடத்திய பகுதிகளில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.மேலும் போராட்டக்காரர்களின் ஒரு பிரிவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர், 
தமிழகம் முழுவது போராட்டங்களில் ஈடுப்பட்ட ஆயிரக்கணக்கான பாஜகவினர் கைதுசெய்யப்பட்டனர்.

 

Tags : திமுக அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான பாஜகவினர் கைது..

Share via