ஷவர்மா சாப்பிட்ட மருத்துவகல்லூரி மாணவர்கள் மூன்று பேருக்கு வாந்தி மயக்கம்
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் துரித உணவு கடையில் ஷவர்மா வாங்கி சாப்பிட்ட கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உடல் நல பாதிப்புகளுக்கு உள்ளாகி உள்ள நிலையில் அந்த கடையை மூட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார். ஒரத்த நாட்டில் உள்ள அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் மூன்று மாணவர்கள் நேற்று இரவு பேருந்து நிலையம் அருகே உள்ள கிரீன் துரித உணவு கடையில் ஷவர்மா வாங்கி சாப்பிட்டுள்ளனர். பின்னர் விடுதிக்கு சென்று அவர்களுக்கு வயிற்றுப்போக்கு வாந்தி மூச்சுத்திணறல் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சித்ரா இன்று அந்த கடையை ஆய்வு செய்தபோது கெட்டுப்போன கறி பயன்படுத்தப்பட்டு இருந்தது தெரிய வந்ததை அடுத்து உடனடியாக அந்த கடை உட்பட மூன்று கிளை கடைகளையும் மூட உத்தரவிட்டார்.
Tags :