மரத்தில் கார் மோதி டிரைவர் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அங்காள ஈஸ்வரி தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 47). சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி,இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று சாயல்குடியில் இருந்து மதுரைக்கு சவாரி சென்ற சரவணன் இரவு ஊருக்கு புறப்பட்டார்.
சாயல்குடி அருகே பெருநாழி ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. உள்ளே இருந்த சரவணன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர்யிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த பெருநாழி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முக சுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :