ராமநாதபுரம் ராமேஸ்வரத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த தீயிட்டுக் கொளுத்திய 6 வடமாநில இளைஞர்கள் கைது
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த வடகாடு மீனவ கிராமத்தை சேர்ந்த பாலு என்பவரின் மனைவி சந்திரா மீனவப் பெண்ணான இவர் கடந்த செவ்வாய்க்கிழமையன்று காலையில் கடல்பாசி எடுப்பதற்காக சென்றுள்ளார். மாலையில் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் போலீசில் புகார் அளிக்கப்பட்டது இதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் காட்டுப்பகுதியில் அரை நிர்வாணமாக மீட்டனர். இதனையடுத்து அப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பணியில் வேலை செய்யும் வடமாநில இளைஞர் களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் இறால் பண்ணை அடித்து நொறுக்கி தீ வைத்துக் கொளுத்தினர் அங்கு தங்கியிருந்த 6 வடமாநில இளைஞர்கள் பொதுமக்கள் அடித்து உதைத்தனர் சந்திராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போலீசார் எடுத்துச் செல்ல முயன்ற பொழுது மக்கள் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முற்றுகைப் போராட்டம் நடத்தினர். மக்களின் தாக்குதலுக்கு ஆளான 6 பேரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர் முதல்கட்ட விசாரணையில் வடமாநில இளைஞர்கள் 3 பேர் போதையில் சந்திராவை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து சேலையால் கழுத்தை நெரித்து கொலை செய்து பின்பு அடையாலம் தெரியக்கூடாது என்பதற்காக தீயிட்டுக் கொளுத்தி இருப்பது தெரியவந்தது. சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேர் யார் என்பது தெரியாத நிலையில் ஆறு பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags :