கள்ளக்காதலர்கள் விஷம் அருந்தி தற்கொலை-போலீசார் விசாரணை

by Editor / 01-06-2022 10:28:42pm
கள்ளக்காதலர்கள் விஷம் அருந்தி தற்கொலை-போலீசார் விசாரணை

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள வெள்ளாரம் கிராமத்தை சேர்ந்தவர் மயிலேறி(40). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவருக்கு அதே ஊரைச் சேர்ந்த செல்வமணி என்பவரது மனைவி மகாராசி என்பவருக்கு இடையே கள்ளக்காதல் இருந்துள்ளது. மகாராசிக்கு திருமணமாகி 3குழந்தைகள் உள்ளன. இவர்கள் கள்ளகாதல் இரு குடும்பத்தினற்கு தெரிய வர கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே நிலையில் இன்று மயிலேறிக்கு சொந்தமான  காட்டுப்பகுதியில் இருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இருவரின் உடலையும் ஓட்டப்பிடாரம்  போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Fake lovers commit suicide by drinking poison-police investigation

Share via