பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது நண்பர்கள் இடையே மோதல் ஒருவர் குத்தி கொலை.

by Editor / 03-06-2022 09:55:57am
 பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது நண்பர்கள் இடையே மோதல் ஒருவர் குத்தி கொலை.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஓலைப்பட்டி அருகே கோவில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக நாகப்பட்டினத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட சிற்பிகள் அக்கோயிலில் சிற்பவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் செந்தில்குமார் என்பவருக்கு நேற்று பிறந்தநாள்  என்பதால் நண்பர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நண்பர்களுக்கு செந்தில்குமார் மது விருந்து வைத்துள்ளார். இதில் மற்றவர்கள் மது அருந்தி விட்டு அறையில் தூங்க சென்று உள்ளனர் இதில் பிறந்தநாள் நபர் செந்தில்குமார் மற்றும் சீனிவாசன் என்பவர் இருவரும் இரவு மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது செந்தில்குமார் சீனிவாசனை தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது இதில் ஆத்திரமடைந்த சீனிவாசன் அருகாமையிலிருந்த கத்தி எடுத்து செந்தில் குமாரை சரமாரியாக குத்தி உள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே செந்தில்குமார் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். அக்கம்பக்கத்தினர் வெண்ணந்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.இதில் நாகப்பட்டினத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவர் செந்தில்குமாரை கொலை செய்ததாக வெண்ணந்தூர் காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது மதுபோதையில் நண்பரே நண்பரை குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Tags : One person was stabbed to death in a clash between friends during a birthday celebration

Share via