திருமலை ஏழுமலையான் கோவிலில் கனமழை சுவாமி தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் கடும் அவதி

by Staff / 13-06-2022 12:49:26pm
திருமலை ஏழுமலையான் கோவிலில் கனமழை சுவாமி தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் கடும் அவதி

திருப்பதியில் பெய்த மழை காரணமாக சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். வார விடுமுறை நாள் என்பதால் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க திரண்டனர். இந்த நிலையில் திடீரென கொட்டி தீர்த்த கனமழையால் தங்குவதற்கு அறைகள் கிடைக்காத பக்தர்களுக்கு ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல இயலாத பக்தர்களும் பெரும் அவதிக்குள்ளாகினர்.

 

Tags :

Share via