அவசர சிகிச்சை பிரிவை மூடிவிட்டு படுத்து உறங்கிய செவிலியர்கள்

by Staff / 14-06-2022 02:18:24pm
அவசர சிகிச்சை பிரிவை  மூடிவிட்டு படுத்து உறங்கிய செவிலியர்கள்

 கோவை அன்னூர் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவை  மூடிவிட்டு செவிலியர்கள் உள்ளே உறங்கியதாக கூறப்படும் நிலையில் நள்ளிரவில் சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் கதவை தட்டிக் கொண்டிருந்த வீடியோ வெளியாகியுள்ளது. குடும்ப தகராறில் சாணிபவுடரை அருந்திய பெண்ணை சிகிச்சைக்காக அழைத்து வந்தபோது அவசர சிகிச்சை பிரிவு உள்பக்கம் தாளிடப்பட்டு இருந்தது. இதனால் உறவினர்கள் வெகு நேரமாக கதவை தட்டி செவிலியர்கள் அழைத்துள்ளனர். பின்னர் சுமார் ஒரு மணி நேரம் கழித்து கதவை திறந்து செவிலியர் சாணி பவுடர் பருகிய பெண்ணுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.

 

Tags :

Share via