ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள்...

by Editor / 15-06-2022 04:12:14pm
 ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள்...

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில், 3 பிரிவுகளாக, சுமார் 120 தூய்மைப் பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.இந்நிலையில், கம்பம் நகராட்சி 33 வார்டு கவுன்சிலர்கள், விதிகளை மீறி  8 மணி நேரத்திற்குப் பதிலாக 12 மணி நேரம் கூடுதலாக, வேலை வாங்குவதாகவும், கவுன்சிலர்களின் உறவினர்கள் வேலை பார்க்கச் சொல்லி  மிரட்டுவதாவும், ஒருமையில் பேசுவதாகவும் புகார் கூறி, பணிகளைப் புறக்கணித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
தூய்மைப் பணியாளர்களின் வேலை நிறுத்தத்தால்  கம்பம் நகராட்சி பகுதிகளில் குப்பைகள் மலைபோல் தேங்கிக் கிடந்தன.

 

Tags :

Share via