இளைஞருக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளித்து தீர்ப்பு

by Editor / 16-06-2022 01:43:59pm
இளைஞருக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளித்து தீர்ப்பு

சேவியர் காலனி பகுதியைச் சேர்ந்த ஜோகப்மெல்கி என்ற இளைஞர் வெல்டிங் கடையில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதான பிளஸ் 2 மாணவியை கடத்திச் சென்று அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஜோகப்மெல்கி கைது செய்யப்பட்டார். போக்சோ வழக்குகளை விசாரிக்கும் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது அவருக்கு 17 ஆண்டு சிறையும் 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

 

Tags :

Share via