பெண் எஸ்ஐயை தாக்கிய குற்றவாளி கைது
திருச்சூரில் பெண் எஸ்.ஐ.யை தாக்கிய வழக்கில் புத்தன்வீட்டில் புள்ளையன் ஜினு ஹாபி (43) என்பவரை கைபமங்கலம் போலீசார் கைது செய்தனர். சனிக்கிழமை இரவு குடித்துவிட்டு ஆபத்தான நிலையில், டிப்பர் லாரி ஓட்டிவந்த ஜினு ஹாபியை பொதுமக்கள் மடக்கிப்பிடித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்து போலீசார், அவரை ஜீப்பில் ஏற்றிய போது, பெண் எஸ்ஐ கிருஷ்ண பிரசாத் என்பவரை குற்றவாளி தாக்கினார். எஸ்.ஐ.யின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Tags :