நெல்லையில் பட்டா வழங்க லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

by Editor / 19-06-2022 01:53:53pm
நெல்லையில் பட்டா வழங்க லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

நெல்லை மாவட்டம் பணகுடி யில் பட்டா வழங்க லஞ்சம் பெற்றதாக வருவாய் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். துறை கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த 4 பெண்கள் தங்களது நிலத்திற்கு பட்டா கோரி பணகுடி வருவாய் ஆய்வாளர் ஜான்சிராணி என்பவரை அணுகி அவர்களிடம் ஜான்சிராணி தலா 10,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. முன்பணமாக அந்தப் பெண்கள் ஜான்சிராணி இடம் தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்கியது அங்கிருந்த ஒரு பெண் வீடியோ எடுத்து வெளியிட்டர்  இந்த வீடியோ இணையத்தில் பரவியது அடுத்து வருவாய் ஆய்வாளர் ஜான்சிராணி பணியிடை நீக்கம் செய்து நெல்லை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

 

Tags :

Share via